Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
சங்குவேலி பகுதியில், தனது மனைவியின் தங்கையை, பாலியல் துஷ்பிரயோகம் செய்தவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ரீ.கருணாகரன், செவ்வாய்க்கிழமை (19) உத்தரவிட்டார்.
திங்கட்கிழமை (18) வீட்டில் உள்ள அனைவரும் வெளியில் சென்ற வேளையிலேயே, தனிமையில் இருந்த 14 வயது சிறுமியை சந்தேக நபர், பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த சிறுமி, வீட்டிலுள்ளவர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேக நபரை கைது செய்து, மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமி, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
8 hours ago
01 Oct 2025
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
01 Oct 2025
01 Oct 2025