2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மோதலில் ஈடுபட்டவர்களுக்கு விளக்கமறியல்

Thipaan   / 2015 செப்டெம்பர் 05 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கைகலப்பில் ஈடுபட்ட 35, 30 வயதுடைய இருவரையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் ஆர்.சபேசன், வெள்ளிக்கிழமை (04) உத்தரவிட்டார்.

தும்பாட்டி கடலில் மீன்பிடியில் ஈடுபடும் கரம்பன் பகுதியினை சேர்ந்த இருசாரருக்கு கடற்ரையில் படகு நிறுத்தி வைப்பது தொடர்பில் கருத்து முரண்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாகவே இவர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் இரு தரப்பிலும் இருந்து இருவரை சந்தேகத்தில் கைது செய்திருந்தனர்.

தொடர்ந்து ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது பதில் நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .