Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
குணசேகரன் சுரேன்
யாழ்.மாவட்ட மீன் உற்பத்தியில் 1983ஆம் ஆண்டு பெற்ற அடைவுமட்டமான 48 ஆயிரத்து 677 மெற்றிக்தொன் என்னும் அளவு உற்பத்தியை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு எத்தணிப்பதாக யாழ்.மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1983ஆம் ஆண்டு உற்பத்தியின் பின்னர் யாழ்ப்பாணத்தில் மீன் உற்பத்தியானது படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. 2000ஆம் ஆண்டு அதிகுறைந்த மீன்உற்பத்தி வருடமாக 2,500 மெற்றிக்தொன்னுக்கு அண்மியதாகக் காணப்பட்டது.
உள்நாட்டு யுத்தம், மீன்பிடி பிரதேசங்கள் உயர்பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டமை, மீனவர்கள் பலர் இடம்பெயர்ந்தமை, முக்கிய மீன்பிடித்துறைமுகங்களில் (மயிலிட்டி) மீன்பிடி தடைப்பட்டமை ஆகியன மீன் உற்பத்தி குறைவுக்கு காரணமாக அமைந்தன.
ஆனால், அதன் பின்னர் மீன் உற்பத்தியானது படிப்படியாக வளர்ச்சியடைந்தது. 2005ஆம் ஆண்டு 15 ஆயிரம் மெற்றிக்தொன்னாக அதிகரித்து, 2009 வரையான காலப்பகுதியில் சிறிய குறைவையும் காட்டியது. அதன்பின்னர் 2010ஆம் ஆண்டு முதல் மீன் உற்பத்தியானது அதிகரித்த வண்ணம் சென்று, 2014ஆம் ஆண்டு 31 ஆயிரத்து 767 மெற்றிக்தொன் மீன்கள் பிடிக்கப்பட்டன.
1983ஆம் ஆண்டு இலக்கை அடைவதற்கு, இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடியால் கடல்வளம் அழிக்கப்படுதல், மீன்பிடிப் பிரதேசங்கள் உயர்பாதுகாப்பு வலயமாக இருத்தல், தொழில்நுட்ப வசதிகளை மீனவர்கள் உள்வாங்கிக் கொள்ளாமை உள்ளிட்ட சில காரணிகள் தடையாகவுள்ளது.
இந்தக் காரணிகள் விலகும் பட்சத்தில் மீன் உற்பத்தியில் யாழ்.மாவட்டம் சிறந்து விளங்கும். யாழ்;. மாவட்டத்தில் 298 கிலோமீற்றர் நீளமான கடல்பகுதியில் 22 ஆயிரத்து 199 மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
15 minute ago
25 minute ago