Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜனவரி 10 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
கிணற்றில் நீர் அள்ளி குளித்தவர், கால் இடறி தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம், யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் சனிக்கிழமை (09) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் மின்சார சபையில் ஊழியராக பணி புரியும் சோமசுந்தரம் தவராஜா (வயது 52) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டுள்ளனர்.
மரண விசாரணகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
39 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
4 hours ago