2025 ஜூன் 28, சனிக்கிழமை

மீனவர்களில் வலைகளுக்குள் சிக்கும் வெடிக்காத எறிகணைகள்

Gavitha   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு நந்திக்கடலில் காணப்படும் வெடிக்காத எறிகணைகள் மற்றும் எறிகணைச் சிதறல்கள் காரணமாக, மீன்பிடியில் ஈடுபடுவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக நந்திக்கடலில் மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இறுதிப்போர் இடம்பெற்ற போது, நந்திக்கடல் பரப்பில் பெருமளவு எறிகணைகள் வீழ்ந்த நிலையில், வலைகளில் தற்போது வெடிக்காத எறிகணைகள் சிக்குவதாகவும் அதேவேளை, எறிகணைச் சிதறல்களினால் கடற்றொழிலாளர்களின் வலைகள் சேதமடைவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

இறுதி யுத்தத்தால் மிக மோசமான தாக்குதல்கள் இந்தப் பகுதியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .