Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் வீதியை புனரமைத்துத் தருமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலரிடம் வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை, மாத்தளன், சாலைக்கிராமங்களின் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தில், அண்மையில் நடைபெற்ற கூட்டத்திலும் கடற்றொழிலாளர்களினால் இவ்வீதியைப் புரமைத்துத் தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நகருக்கு கடலுணவை எடுத்து வருவதற்கு மேற்படி வீதி முக்கியமானதாகும்.
இறுதிப்போர் நடைபெற்ற சமயத்தில் பெரும் சேதத்துக்குள்ளாகிய இவ்வீதி, இதுவரை புனரமைக்கப்படாதிருப்பதன் காரணமாக, மேற்படி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முல்லைத்தீவு நகருக்கு வருவதில் இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.
20 கிலோமீற்றர் வரையான வீதியே, இவ்வாறு புனரமைக்கப்படாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
36 minute ago