2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

முள்ளியவளைக்கு தபாலகம் வேண்டும்

Gavitha   / 2016 ஜனவரி 29 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, முள்ளியவளையில் தபாலகமொன்றை அமைத்துத் தருமாறு முள்ளியவளைப் பகுதி கிராம அபிவிருத்திச் சங்கங்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளன.

முல்லைத்தீவின் உப நகரமான முள்ளியவளையில், தபாலகம் ஒன்று இல்லாததன் காரணமாக மீளக்குடியமர்ந்துள்ள பெருமளவு மக்கள் 5 கிலோமீற்றரிலுள்ள முல்லைத்தீவு நகரத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் போக்குவரத்து சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்று அபிவிருத்திச் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலும் இவ்விடயத்தை அவர்கள் எடுத்துக்கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X