2025 ஜூன் 25, புதன்கிழமை

மக்கள் இயக்கமாக த.தே.கூ.வை மாற்ற போராட வேண்டும்

Gavitha   / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

பேச்சுக்களில் அரசு முட்டுக்கட்டை போட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் இயக்கமாக மாற்றி, தெருவில் இறங்கி போராடக் கூடிய அளவுக்கு பலமாக மாற்ற வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்காக தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் நிகழ்வில் சனிக்கிழமை(12) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்ததற்கு பிற்பாடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு செய்தியை குறிப்பிட்டிருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிற்பாடுதான் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வு உட்பட ஏனைய விடயங்களை தாங்கள் பேசித் தீர்க்க முடியும் என தெரிவித்திருந்தார்.

கடந்த 17-08-2015 தேர்தலொன்று நடந்து முடிந்துள்ளது ஒரு தேசிய அரசாங்கமும் அமையப்பெற்றுள்ளது. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் சம்பந்தன் ஐயா அவர்களுக்கு எதிர்க்கட்சி என்கிற பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, தொடர்ந்து இந்தத் தேசிய அரசாங்கம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைப் புறந்தள்ள முடியாது. தமிழ் மக்களிடம் நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தினூடாக ஆணை கேட்டிருந்தோம்.

குறிப்பாக இந்த இறுதிக்கட்ட போரிலே நடைபெற்ற படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்காக ஒரு நீதியான சர்வதேச விசாரணை வேண்டுமென்பதை இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்திலே மக்களிடம் ஆணை கேட்ட முக்கியமான விடயமாக ஒரு சர்வதேச விசாரணை தேவை என்பதாகும் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .