2025 ஜூலை 05, சனிக்கிழமை

மதுபோதையில் அநாகரிகமாக நடந்தவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 03 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொண்ட நெடுந்தீவு 10ஆம் வட்டாரப்பகுதியினை சேர்ந்த நபருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், 50 மணித்தியாலங்கள் சமுதாய சீர்திருத்த கட்டளைக்கு உட்படுத்துமாறு சமுதாய சீர்திருத்த அதிகாரிக்குப் பணித்தார்.

நெடுந்தீவு பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு மீதான விசாரணையின் போது சந்தேக நபர், தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.

இதன்போது நீதவான் அபராதத்துடன் கூடிய சமுதாய சீர்திருத்த கட்டளைக்கு உட்படுத்த உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .