2025 ஜூன் 25, புதன்கிழமை

மது வெறுப்பு சிகிச்சைக்கு உத்தரவு

Sudharshini   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

சட்டவிரோதமான முறையில் கள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பருத்தித்துறை பொலிஸாரால் கைதான நாகர் கோயில் பகுதியினை சேர்ந்த சந்தேக நபரை, மூன்று மாதகாலம் சமூதாய சீர்திருத்தத்துக்கு உட்படுத்துமாறு பருத்தித்துறை மாவட்ட நீதமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா வெள்ளிக்கிழமை (11) உத்தரவிட்டார்.

கள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபர் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதவான் 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். எனினும், 6 பிள்ளைகளின் தந்தையான இவரால் அபராத தொகையினை செலுத்த முடியாமல் போயுள்ளது.

இதனையடுத்து, குறித்த நபரை பொறுப்பேற்றுக்கொண்ட சமூதாய சீர்திருத்த திணைக்கள அதிகாரி, இவரின் பொருளாதார நிலைமை தொடர்பில் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதனையடுத்து, மீண்டும் வழக்கினை விசாரித்த நீதவான், சமூதாயம் சார் சீர்;திருத்த கட்டளைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டதுடன், மதுவெறுப்பு சிகிச்சைக்கு உட்படுத்தவும் கட்டளையிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .