2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மருமகள் துஷ்பிரயோகம்: மாமன் கைது

Gavitha   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மருமகள் முறையிலான 10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய 50 வயது மாமனாரை நேற்று வெள்ளிக்கிழமை (19) கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் வீட்டுக்குவரும் மாமன், சிறுமியுடன் அங்கசேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை அவதானித்த தாய் பலமுறை அவருக்கு எச்சரிக்கை விடுத்தும் சிறுமியுடன் தகாத முறையில் நடந்துக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் வியாழக்கிழமை (18) சிறுமியின் தாயால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சிறுமியை சட்ட வைத்திய அதிகாரி முன் ஆஜர்செய்து மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X