Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
George / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி உருத்திரபுரம், எள்ளுக்காடு, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த யர்ஷிகா (வயது 03) என்ற சிறுமியின் கொலை தொடர்பில் சட்டவைத்தியதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட மரபணு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், புதன்கிழமை (16) உத்தரவிட்டார்.
கிளிநொச்சி நீதிமன்றத்தில் குறித்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மருத்துவ ரீதியான அறிக்கைகளை தாங்கள் இன்னமும் பெற்றுக்கொள்ளவில்லையென்பதை பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து, மேற்படி உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.
சிறுமியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரனான 14 வயதுச் சிறுவனை அச்சுவேலியிலுள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
கிளிநொச்சியில் கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி மாலை 4 மணியிலிருந்து காணாமற்போன உருத்திரபுரம், எள்ளுக்காடு, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரகுமார் யர்ஷிகா (வயது 03) என்ற சிறுமி, காணாமற்போன இடத்திலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பொறிக்கடவை என்னுமிடத்தில் உள்ள வயல் வெளியிலிருந்து கடந்த ஜூலை 19 ஆம் திகதி உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமி காணாமற்போன அன்று, சிறுமியை வாய்க்கால் வரையில் கொண்டு சென்று விட்ட சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரனைக் பொலிஸார் கைது செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
4 hours ago