Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
- என். ராஜ்
யாழ். மருதனார்மடம் பொதுச்சந்தையில் இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஐந்து பேருக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.
ஏழாலையைச் சேர்ந்த மூன்று பேர், இணுவிலைச் சேர்ந்த இருவரும் என்று ஐந்து பேர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் மருதனார்மடம் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையே இன்று மாலை 6.15 மணிக்கு வெளியாகியுள்ளது. அங்கு இன்று 98 பேரின் மாதிரிகள் மட்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
19 minute ago
26 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
3 hours ago