Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
மழை காலங்களில் அச்சுவேலி பேருந்து நிலையத்தைச் சுற்றி மழை நீர் தேங்கி நிற்பதால் பேருந்துகள் சென்று வருவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பலமுறை வலி. கிழக்கு பிரதேச சபையின் செயலாளருக்கு பலமுறை தெரியப்படுத்திய போதும் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி வழங்கப்படுவதுடன் நின்றுவிடுகின்றனரே தவிர நடவடிக்கை எடுப்பதில்லை என தனியார் பேருந்து சாரதியொருவர் தெரிவித்தார்.
இந்நிலையால் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பேருந்து சாரதிகள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
49 minute ago