Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 07 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
எல்லை தாண்டி மீன்பிடித்தக் குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் நால்வரினதும் விளக்கமறியலை, மீண்டும் 14 நாட்கள் நீடித்து, பருத்தித்துறை நீதவான் நளினி கந்தசாமி, இன்று (07) உத்தரவிட்டார்.
கடந்த மாதம் 20ஆம் திகதி, பருத்தித்துறை கடற்பரப்பினுள் நுழைந்து மீன்பிடித்த போது, குறித்த மீனவர்களை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
பின்னர், அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கை நிமித்தம், கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில், குறித்த மீனவர்களின் வழக்கு, இன்று (07) பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது, மீனவர்களை விடுவிப்பதற்குரிய ஆலோசனை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து கிடைக்கவில்லை என, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்தே, விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago