2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யாழ். ஊடகவியலாளர் விபத்தில் உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு அருகில், செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர், சிகிச்சை பலனின்றி நேற்றுப் புதன்கிழமை (03) அதிகாலை, உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகையின் புகைப்பட ஊடகவியலாளரான கந்தையா ரட்ணம் (வயது 68) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்று, வீதியில் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளை மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X