Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
சட்டவிரோத செயல்களற்ற அமைதியான யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கே தாம் முயற்சித்து வருவதாக, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி யூ.கே.வூட்லர் தெரிவித்துள்ளார்.
யாழ். புனித மரியாள் வித்தியாலயத்தில், இடம்பெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடலின் போதே, இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'பாடசாலை நிறைவடைந்ததும் மாணவர்கள் வீடுகளுக்கு செல்லவேண்டும். தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடக்கூடாது. அவ்வாறு பிரச்சினைகள் ஏதும் இடம்பெற்று கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு எந்தவித மன்னிப்பும் வழங்கப்படமாட்டாது. உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அவர் கூறினார்.
மேலும், 'பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களது நடத்தைகளில் செயற்பாடுகளில், மாற்றமோ சந்தேகமோ ஏற்பட்டால், உடனடியாக எமக்கு தெரிவிக்கவேண்டும்.
குறிப்பாக 18 தொடக்கம் 25 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறான சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் நடத்தைகள் செயற்பாடுகள் தொடர்பாக அவர்களது பெற்றோரும் உறவினர்களும், சகோதரர்களும் கவனமெடுக்க வேண்டும்' என்றும் அவர் கோரினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
2 hours ago