2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாண வணிக சந்தர்ப்பங்கள் தொடர்பான கலந்துரையாடல்

Gavitha   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்திய, திண்டுக்கல் இளம் முயற்சியாளர்கள் பாடசாலையின் அனுசரணையிலான, யாழ்ப்பாணத்தின் வணிக சந்தர்ப்பங்கள் தொடர்பான கலந்துரையாடல், யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் வியாழக்கிழமை (08) நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 42 வர்த்தகர்கள் கலந்துகொண்டனர். யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கு இந்திய தமிழ் நாட்டு வர்த்தகர்களுக்குமிடையிலான ஏற்றுமதி இறக்குமதிகளை ஊக்குவிக்கும் வகையில், இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்வதற்கென தமிழகத்தில் தனியான சந்தையொன்று காணப்படுவதாகவும் அவ்வாறான சந்தைகளை வடமாகாணத்திலுள்ள வர்த்தகர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திண்டுக்கல் வர்த்தகர்கள் கூறினர்.

42 வர்த்தகர்களுக்கு மாதாந்தம் 1,000 கோடி ரூபாய் விற்பனை புரள்வை மேற்கொள்வதாகவும் அவ்வாறு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர்களும் சிறுசிறு உற்பத்திகளை மேற்கொண்டு விற்பனை புரள்வை அதிகரிக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டனர்.

யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன், வடமாகாண வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன், யாழ்ப்பாண வர்த்தகர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .