Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். அரியாலை முள்ளி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதன் அருகில் பெண்களில் ஆடைகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்களும் நேற்று வெள்ளிக்கிழமை (16) மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் எலும்புக்கூடு மற்றும் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் பை, பென்சில், குடை மற்றும் இரு விதமான செருப்பு, ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு நேற்று மாலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
போர்ச்சூழலில் இப்பகுதி படையினரின் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
37 minute ago
42 minute ago