2025 ஜூன் 25, புதன்கிழமை

யாழில் பழமை வாய்ந்த பள்ளிவாசல் மீள ஆரம்பம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணத்தில் போரா முஸ்லிம் சமூகத்தினால் பழமை வாய்ந்த பெரிய பள்ளிவாசல் மீள் நிர்மாணத்துடன், இன்று சனிக்கிழமை (12) திறந்;து வைக்கப்பட்டுள்ளது.

போரா முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீக தலைவர் இதனை திறந்து வைத்தார்.

1906ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பள்ளிவாசல் கடந்த கால யுத்தங்களினால் முற்றாக சேதமடைந்து இருந்த நிலையில் தற்போது மீள்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ். இந்திய துணைத்தூதர் கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.கே.பெரேரா, யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உ.வூட்லர் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .