2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழில் மாணவர்களுக்கு சைவநெறிப் போட்டி

Gavitha   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

யாழ். கல்விவலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே சைவசமய அறிவை மேம்படுத்தும் வகையில் சைவநெறிப் போட்டி நடத்தப்படவுள்ளது.

இதற்கமைய பேச்சு, மாலை கட்டுதல், தோரணம் பின்னுதல் மற்றும் பண்ணிசை ஆகிய போட்டிகள் தரம் 6 முதல் க.பொ.த உயர்தர மாணவர்களிடையே, நான்கு பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன.

இப்போட்டிகளுக்கான விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கோப்பாய் கோட்ட மட்டப்போட்டி, எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை யாழ். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியிலும், 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நல்லூர் மற்றும் யாழ்ப்பாணக் கோட்டங்களுக்கான போட்டிகள் யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியிலும் இடம்பெறவுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .