2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழ் மாநகர சபை மேயரானார் ஆர்னோல்ட்

Editorial   / 2018 மார்ச் 26 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன் 

யாழ். மாநகர சபையின் மேயராக தமிழரசுக் கட்சியின் ஆர்னோல்ட் தெரிவானார். 

யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளருக்கான  இரகசிய வாக்கெடுப்பில், தமிழரசுக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட ஆர்னோல்ட் 18 வாக்குகளைப் பெற்றதோடு, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட மணிவண்ணனும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட றெமீடியஸும் தலா 13 வாக்குகளைப் பெற்றனர்.

விதிகளின் படி குறைந்த வாக்குகளைப் பெற்றவர் நீக்கப்பட்டு, அதிக வாக்குகளைப் பெற்ற இருவருக்கிடையே வாக்கெடுப்பு நடைபெறவேண்டுமென்ற நிலையில், மணிவண்ணனும் றெமீடியஸும் தலா 13 வாக்குகளைப் பெற்ற நிலையில், குலுக்கல் முறையில் மணிவண்ணன் நீக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து, ஆர்னோல்டும் றெமீடியஸுக்குமிடையே இறுதி வாக்கெடுப்பு இடம்பெறவிருந்த நிலையில், போட்டியிலிருந்து றெமீடியஸ் விலகிய நிலையில் யாழ். மாநகர சபையின் மேயராக ஆர்னோல்ட் தெரிவானார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .