2025 ஜூன் 28, சனிக்கிழமை

ரௌவுடிக் கும்பல் சிக்கியது

George   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

கொக்குவில் பகுதியில் வாள்கள், பொல்லுகளுடன் 5 பேர் கொண்ட ரௌவுடிக் கும்பலொன்றை திங்கட்கிழமை (28) மாலை கைது செய்ததாக யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யூ.கே.வூட்லர் தெரிவித்தார்.

கொக்குவில் சந்திப்பகுதியில் அடுத்தடுத்து வேகமாக சென்ற 3 மோட்டார் சைக்கிள்களை, வீதிப் போக்குவரத்தில் ஈடுபட்ட பொலிஸார் மறித்துச் சோதனை செய்தனர். இதன்போது, 3 மோட்;டார் சைக்கிளுக்கும் எவ்வித ஆவணங்களும் இருக்கவில்லை.

இதனையடுத்து, அந்தக் கும்பலிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது, அவர்களிடமிருந்து வாள்கள், கம்பிகள் என்பன மீட்கப்பட்டன. இதனையடுத்து, 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அண்மையில் கொக்குவில் சந்தியில் இளைஞன் ஒருவரை வாளால் வெட்டிய சம்பவத்துக்கும் இந்தக் குழுவுக்கும் தொடர்புகள் இருக்கலாம் என பொறுப்பதிகாரி சந்தேகம் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் அதன் பின்னர், இவர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .