2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் பலி

George   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -செல்வநாயகம் கபிலன்

மல்லாகம் கோட்டைக்காடு பகுதியில் இன்று வியாழக்கிழமை (04) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏழாலை மேற்குப் பகுதியைச் சேர்ந்த சண்முகவடிவேல் சிவசங்கர் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்டவரை, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற கடுகதி ரயில் மோதியுள்ளது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X