Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மார்ச் 26 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் நாவற்குழி - புங்கன்குளம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில் கடவையில் படுத்திருந்த நபர், ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.
இன்று (26) காலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்று யாழ். அரியாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தவநாயகம் திரேந்திரா (வயது 28) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயில் மோதியதில் படுகாயமடைந்த இவர், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
21 minute ago
44 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
44 minute ago
58 minute ago
2 hours ago