2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

விசேட பொதுக்கூட்டம்

Niroshini   / 2016 மார்ச் 11 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

வட மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கப் பொதுக்கூட்டம் நாளை சனிக்கிழமை (12) காலை 9 மணிக்கு கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

அகில இலங்கை ஆசிரிய ஆலோசகர் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட நிர்வாகக்குழுவினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர்களின் நிலை குறித்து கலந்துரையாடுவதுடன் வடமாகாணத்தில் தற்போது கடமையில் உள்ள ஆசிரிய ஆலோசகர்களது விபரங்களையும் திரட்டிச்செல்லவுள்ளனர்.

எனவே, வட மாகாணத்திலுள்ள பன்னிரெண்டு கல்வி வலயங்களிலும் கடமையாற்றும் அனைத்து ஆசிரிய ஆலோசகர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு வடமாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X