Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 23 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கி.பகவான்
நுணாவில், அல்லிக்கரை ஒழுங்கையிலுள்ள வீடுகள் இரண்டு; 15 பேர் கொண்ட இனந்தெரியாத குழுவொன்றினால் செவ்வாய்க்கிழமை (22) இரவு 11 மணியளவில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்த இருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாலசுப்பிரமணியம் சந்திரலேகா (வயது 56), அவரது மகன் பாலசுப்பிரமணியம் அஜந்தன் (வயது 35) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி என சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்;கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டும், நேற்று புதன்கிழமை (23) காலை 11.30 மணிக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
26 Jun 2025