2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வீட்டுக்குள் நுழைந்த கடற்படை சிப்பாய்க்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நெடுந்தீவு 9ஆம் வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (26) இரவு அத்துமீறி நுழைந்த கடற்படைச் சிப்பாயை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், ஞாயிற்றுக்கிழமை (27) உத்தரவிட்டார்.

வீடொன்றுக்குள் அத்துமீறி கடற்படைச் சிப்பாய் நுழைந்த போது, அங்கிருந்தவர்கள் அபாயக் குரல் எழுப்பியதும் தப்பிச் சென்றுள்ளார். சிப்பாயின் அடையாள அட்டை வீட்டு வளாகத்தில் வீழ்ந்து கண்டுடெடுக்கப்பட்டு, அதனடிப்படையில் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிப்பாயை பொலிஸார் iது செய்தனர். 

தான் சென்ற வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் பெண் தன்னை அழைத்ததாகவும் தான் வீடு மாறிச் சென்றதாகவும் குறித்த சிப்பாய் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்தார்.

சிப்பாயை, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (27) ஆஜர்செய்த போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .