2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வித்தியா கொலை; சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

George   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கின் கைதான 12 சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை நீடித்து ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால், இன்று செவ்வாய்க்கிழமை (23) உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போது, மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள 12 சந்தேகநபர்களும் மன்றில் ஆஜர்செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நீதவான், 'ஏதேனும் மன்றில் தெரிவிக்க விரும்புகின்றீர்களா?' என வினாவினார். அதற்கு அவர்கள், 'இல்லை' என கூறியதும், வழக்கினை எதிர்வரும் 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X