2025 ஜூன் 23, திங்கட்கிழமை

விபத்தில் இராணுவ சிப்பாய் பலி

Gavitha   / 2015 செப்டெம்பர் 02 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கி.பகவான்

பளைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (01) இரவு வேகக்கட்டுப்பாட்டை இழந்த இராணுவ பிக்கப் வாகனமொன்று பனை மரத்துடன் மோதியதில் அதில் பயணித்த இராணுவ சிப்பாயான நாவற்குழி இராணுவ முகாமைச் சேர்ந்த கே.எச்.வி.மதுரங்க (வயது 22) பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த ஏனைய மூன்று இராணுவத்தினர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

நாவற்குழியிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த வானே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலதிக விசாரணைகளை பளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .