2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விபத்தில் சிறுவன் உட்பட இருவர் படுகாயம்

Gavitha   / 2016 நவம்பர் 08 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் உட்பட இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டான் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் ஜெயரூபன் சஜீவன் (வயது 15), சிவபாதம் அனுரதன் (வயது 21) ஆகிய இருவருமே படுகாயங்களுக்குள்ளாகினர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X