Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
கிளிநொச்சி பகுதியில் கடந்த 1ஆம் திகதி இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் மோதியதில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர், வியாழக்கிழமை (08) இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெடுந்தீவைச் சேர்ந்த குழந்தைவேலு மோகதாஸ் (வயது 29) என்பவரே உயிரிழந்தார்.
கிளிநொச்சிக்கு பணி நிமித்தம் சென்றவர், வீதியைக் கடப்பதற்காக நின்றபோது, வவுனியாவிலிருந்து காரைநகர் நோக்கிச் சென்ற பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் முதலில் கிளிநொச்சி மாவட்;ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago