2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், இருபாலைச் சந்தியில் கடந்த  5ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில்  படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர், இன்று வியாழக்கிழமை (13) உயிரிழந்தார்.

கோப்பாய் தெற்கைச் சேர்ந்த நல்லலிங்கம் சுஜிந்தம் (வயது 30) என்பவரே உயிரிழந்தார்.

வீதியைக் கடப்பதற்காகத் தயாராக நின்ற இவரை, வேகமாக வந்த கார் மோதியதில் படுகாயமடைந்த இந்நபர், அதே காரில் கொண்டு செல்லப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மரண விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X