2025 ஜூன் 23, திங்கட்கிழமை

விபத்தில் வயோதிபர் படுகாயம்

Thipaan   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

முச்சக்கரவண்டி விபத்தில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்து செவ்வாய்க்கிழமை (01) இரவு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை வீதியில் உள்ள சுன்னாகம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம் பெற்ற இவ்விபத்தில் அளவெட்டி கிழக்கைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான செல்லத்துரை அருணாசலம் (வயது 78) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து சைக்கிளில் பிரதான வீதிக்கு வந்த வேளை வேகமாக வந்த ஆட்டோ மோதியதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .