Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
ஏழாலை மயிலணிப் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து அட்டகாசம் புரிய முற்பட்ட 5 பேர் கொண்ட கும்பலை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) இரவு கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிளில் வாள்கள், கத்திகளுடன் மயிலணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் கும்பலொன்று நுழைய முற்பட்டுள்ளது. எனினும், வீட்டிலிருந்தவர்கள் சத்தமிட்டு அயலவர்கள் கூடியமையால் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளது.
இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொறுப்பதிகாரி துஸ்மந்த தலைமையிலான பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதன்போது, அந்தக் கும்பல் மீண்டும், அந்த வீட்டுக்குள் நுழைய முற்பட்ட வேளையில் பொலிஸார் அவர்களில் ஐவரைக் கைது செய்தனர். ஒருவர் தப்பித்து ஓடியுள்ளார்.
அவர்களிடமிருந்து வாள்கள், கத்திகள் என்பன கைப்பற்றப்பட்டன. அண்மையில் மல்லாகம் நீதிமன்றத்துக்கு முன்பாக வைத்து இளைஞர் ஒருவரை வாளால் வெட்டிய சம்பவத்துக்கும் இந்தக் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்தததாக பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
48 minute ago
2 hours ago