2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வாளுடன் ஒருவர் கைது; அறுவர் தப்பியோட்டம்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அல்வாய் திக்கம் பகுதியில் வாளுடன் ஒருவரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர் அல்வாய் முத்துமாரியம்மன் கோயில் பகுதியினை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என பொலிஸார் கூறினர்.

அல்வாய் திடல் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டினை அடுத்து, ஒரு குழுவினர் வாளுடன் திக்கம் பகுதிக்கு வந்துள்ளனர்.

அப்பகுதியில் வீதி ரோந்துக்கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமான முறையில் கூட்டமாக நின்ற நபர்களை விசாரணை செய்ய முற்பட்டுள்ளனர்.

இதன்போது அறுவர் தப்பியோடிய நிலையில் ஒருவரை கைது செய்த பொலிஸார், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் உடமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாளை  கண்டெடுத்தனர். 

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், தப்பியோடிய ஏனைய சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X