Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
அல்வாய் முத்துமாரியம்மன் கோயில் பகுதியினை சேர்ந்த 19 வயதுடைய நபரை அல்வாய் திக்கம் பகுதியில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) வாளுடன் கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார், திங்கட்கிழமை(12) தெரிவித்தனர்.
அல்வாய் திடல் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, ஒரு குழுவினர் வாளுடன் திக்கம் பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப் பகுதியில் வீதி ரோந்துக்கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் கூடி நின்ற நபர்களை விசாரணை செய்ய முற்பட்டுள்ளனர்.
இதன்போது அறுவர் தப்பியோடிய நிலையில் ஒருவரை கைது செய்த பொலிஸார், அவரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது, உடமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், தப்பியோடிய ஏனைய சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
43 minute ago
53 minute ago
3 hours ago