Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 17 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம், கல்லூண்டாய் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி, வீதியில் விழுந்து கிடந்த நபரை, மானிப்பாய் பொலிஸார் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கல்லுண்டாய் வெளியில் நேற்றுப் புதன்கிழமை (16) இரவு 7 மணியளவில் வீதியால் சென்ற நபர் மீது வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு, தாக்குதலாளிகள் தப்பிச்சென்று உள்ளனர்.
அந்நிலையில் தாக்குதலுக்கு இலக்காகிய சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயமடைந்த நிலையில் வீதியில் வீழ்ந்து கிடந்துள்ளார். அதனை வீதியில் சென்றவர்கள் அவதானித்து, பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார், படுகாயமடைந்த நபரை மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago