2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வாள்வெட்டுக்கு இலக்கான இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Kogilavani   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வாள் வெட்டுக்கு இலக்கான மாணவர்கள் இருவர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மல்லாகத்தை சேர்ந்த கண்ணதாசன் கோகுலதாசன் (வயது 18) மற்றும் அளவெட்டி மேற்கைச் சேர்ந்த பத்மசீலன் விதுசன் (வயது 18) என்ற மாணவர்களே வாள் வெட்டில் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள், தெல்லிப்பளையிலுள்ள கல்லூரியொன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்று வருபவர்கள் என தெரியவருகிறது.

மேற்படி இருவரும் சுன்னாகம் பஸ் நிலையப் பகுதியிலுள்ள தமது தந்தையரின் கடைகளில் நின்றுகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்றால் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .