Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் வரவேற்கும் வளைவு மற்றும் நாவற்குழி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள் அனைத்தையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடமாகாண விவசாய மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.
மேற்படி பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படவுள்ளதால் இந்த விளம்பரப் பதாகைகள் அகற்றப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனங்களில் விளம்பரப் பதாகைகள், அதிகளவில் இங்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பதாகைகள், உடனடியாக அகற்றப்படுவதுடன் அனுமதி பெறப்பட்டவை உரிய காலம் முடிவடைந்ததும் அகற்றப்படும் என்றார்.
வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் நாவற்குழி பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
20 minute ago
46 minute ago