2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வடக்கில் வீதிகளை பராமரிப்பதற்கு ரூ.30 மில்லியன் ஒதுக்கீடு

Gavitha   / 2015 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களிலும் புனரமைக்கப்பட்டுள்ள வீதிகளை தொடர்ந்து பராமரிப்பதற்கு 30 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

136 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வடமாகாணத்தில் வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணத்துக்கு 36 மில்லியன் ரூபாயும் மிகுதி 4 மாவட்டங்களுக்கு தலா 25 மில்லியன் ஒதுக்கப்பட்டு 85 சதவீதமான பணிகள் முடிவடைந்துள்ளன.

இவ்வாறான புனரமைக்கப்படும் வீதிகளை தொடர்ந்து பராமரிக்கும் பொருட்டு 30 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வீதிகளின் பயன்பாடு, ஆயுட்காலத்தை நீடிக்கும் பொருட்டு, பராமரிப்புக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .