2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வடமாகாண சபை புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன் 

வடமாகாண சபை புதிய உறுப்பினர்களாக கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் மற்றும் வல்லிபுரம் கமலேஸ்வரன் ஆகியோர் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18) பதவியேற்றனர்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில் இவர்கள் தங்கள் பதவிகளை ஏற்றுக்கொண்டனர்.

வடமாகாண சபை உறுப்பினர்களாகவிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட த.சித்தார்த்தன், சி.சிவமோகன் ஆகியோரின் இடத்துக்காக இந்த புதிய வடமாகாண சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

தர்மலிங்கம் உடுப்பிட்டி அமெரிக்க மிசன் கல்லூரியின் முன்னாள் அதிபர் என்பதுடன், அவர் தனது பிரதேசத்தில் பல சமூக சேவைகளை ஆற்றியவர். தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார்.
 
கமலேஸ்வரன் பெருந்தெருக்கள் திணைக்களத்தின் தொழில்நுட்ப அலுவலராகவும் கூட்டுறவு நிகழ்ச்சி ஒன்றியத்தின் தேசிய மட்ட உறுப்பினராகவும் இருந்தவர். இளம் பருவத்திலிருந்து தமிழரசுக் கட்சியின் அங்கத்தவராக இருந்தவர்.
 
இவர்கள் இருவருமே இவ்வாறு புதிய உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .