Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 12:41 - 1 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
வடமாகாண சபையின் கட்டடத் தொகுதியை வடமாகாணத்தின் மத்தியாகக் கொள்ளப்படும் மாங்குளத்தில் அமைப்பதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாங்குளம் பகுதியில் வடமாகாண சபை கட்டடத் தொகுதியை அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் காணியை, வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் ஆகியோர் திங்கட்கிழமை (14) பார்வையிட்டுள்ளனர்.
மாங்குளம் சந்தியிலிருந்து 500 மீற்றர் வடக்கில் ஏ - 9 வீதியில் 12 ஏக்கர் காணி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபை, தற்போது கைதடியில் அமைந்துள்ளது. வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் மத்தியில் வடமாகாண சபையை அமைப்பதற்கு பல்வேறுபட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
கைதடியில் வடமாகாண சபை அமைந்திருப்பதால், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய சிரமம் ஏற்பட்டது. மாங்குளத்தில் கட்டடத் தொகுதியை அமைக்கும் பட்சத்தில் பல்வேறு சிரமங்களை தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவலிங்கம் சாந்தகுமார் Thursday, 23 May 2019 04:10 AM
எனக்கு மாங்குளசந்தியில் இருந்து. 3000m துரத்தில் எனது காணி உள்ளது. அக் காணி வட மாகாண காணி என எனது வீட்த்திட்டத்தை தடை செய்து உள்ளனர் . நான் 3வருடம் தடுப்பில் இருந்து வந்து. வறுமை கோட்டின் கீழ் உள்ளேன். கூலி வேலை செய்து வாழ்கிறேன். எனது குடும்ப நிலையை கவனித்து . வீட்டுதிட்டம் கட்டி முடிக்க உதவி செய்யுங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
20 minute ago
46 minute ago