2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 27 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள், யாழ். மாவட்டச் செயலகத்தின் முன்பாக, இன்று  (27) முதல், தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கக் கோரி, மத்திய, மாகாண அரசுகளுக்கு கடந்த காலங்களில் பல வழிகளிலும் கோரிக்கை விடுத்த போதும், இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று, போராட்டத்தில் குதித்துள்ள பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்த கோரிக்கைகளை பரிசீலித்து, கால இழுத்தடிப்புக்களின்றி தீர்க்கமானதும் எழுத்து மூலமானதுமான பதிலினை, துறைசார் உயரதிகாரிகள், மத்திய, மாகாண அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பகல், இரவு தொடர் போராட்டமாக, இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும், போராட்டக்காரர்கள் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X