2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வட்டுக்கோட்டையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Nirshan Ramanujam   / 2017 செப்டெம்பர் 07 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுழிபுரம் வீதியில் 8 கிலோ 605 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவரை பொலிஸார் நேற்று (06) இரவு கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் எனவும் அவரை இன்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .