2025 ஜூலை 02, புதன்கிழமை

வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

கொக்குவில் வண்ணார்பண்ணை பகுதியில் வழிபளியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைசெய்ப்பட்ட, மல்லாகம் குப்பிளான் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் ஞாயிற்றுக்கிழமை (25) உத்தரவிட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை (24) கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த இரு பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நகைகளை அறுத்துள்ளனர். இதனை அவதானித்த அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று அவர்களில் ஒருவரை மடக்கி பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் 8 பவுண் தாலிக்கொடி மற்றும் 1 ½ பவுண் தங்கச்சங்கிலி என்பவற்றை அவரிடமிருந்து பொலிஸார் மீட்டனர்.

சந்தேக நபரை ஞாயிற்றுக்கிழமை (25) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்திய போது, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், அன்றையதினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .