2025 ஜூன் 25, புதன்கிழமை

வாக்குப்பெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டன

எம். றொசாந்த்   / 2018 பெப்ரவரி 09 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளுராட்சி சபைகள் தேர்தல் நாளை (10) நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பெட்டிகள், யாழ். மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு  இன்று (09) காலை எடுத்துச்செல்லப்பட்டன.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள யாழ்.மாவட்டத்தின் தேர்தல் மத்திய நிலையத்திலிருந்து வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு  எடுத்துச் செல்லப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மாநகர சபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என 17 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. 243 வட்டாரங்களில் 521 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடையவுள்ளது. வாக்கு எண்ணும் பணிகள் அந்த அந்த வட்டாரத்திலேயே மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .