2025 மே 19, திங்கட்கிழமை

வெள்ள நிவாரணத்துக்கு பணம் சேகரித்தவர் கைது

Editorial   / 2019 ஜனவரி 05 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - தென்மராட்சி பகுதியில் பிரதேச செயலகத்தின் பெயரைப் பயன்படுத்தி வெள்ள நிவாரணத்துக்கு என மோசடியாக பணம் சேகரித்த இளைஞன் ஒருவரை, அப்பகுதி இளைஞர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகஸ்தர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டு எழுதுமட்டுவாள் வடக்கு பகுதியில் வெள்ள நிவாரணம் என பணம் வசூலித்துள்ளார்.

அது குறித்து சந்தேகம் கொண்ட அப்பகுதி இளைஞர்கள் அது தொடர்பில் கிராம சேவையாளருக்கு அறிவித்தனர். அதனை அடுத்து அங்கு வந்த கிராம சேவையாளர் குறித்த இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

தப்பியோடியவரை அங்கிருந்த இளைஞர்கள் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அதன் பின்னர் கிராம சேவையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.

குறித்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் குறித்த இளைஞனை கைதுசெய்து, பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த இளைஞர் காரைநகர் பகுதியை சேர்ந்தவர் எனவும் விசாரணைகளின் பின்னர் இளைஞனை சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X