2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலய 34 வருட நிறைவையொட்டி கண்காட்சி

Kogilavani   / 2012 பெப்ரவரி 27 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் கல்வி வலயத்திற்குற்பட்ட தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் 34ஆவது வருட நிறைவு தினத்தை முன்னிட்டு விசேட கல்விக் கண்காட்சியொன்று இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

பாடசாலை அதிபர் எஸ்.எம்.ஹூதைலீன் தலைமையில் ஆரம்பமான இக் கண்காட்சி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

இக்கண்காட்சியில் 20 காட்சிக் கூடங்களில் கல்வி, வர்த்தகம், விவசாயம், அறிவியல், ஆன்மீகம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக மாணவர்களின் ஆக்கங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சியை பார்வையிடுவதற்காக புத்தளம் கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலை மாணவர்கள் பெருந்திரளானோர் வருகை தருகின்றனர்.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X