Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 27 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
அநுராதபுரம் - யாழ்ப்பான வீதி றாமகலே பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாகன விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதாக அநுராதபுரம் தலைமயக பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி பாலித்த நிஸ்ஸங்க தெரிவித்தார்.
யகல்ல பகுதியிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து இயந்திர கோளாறு காரணமாக எதிரே கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியுள்ளது.
இதன்போது பேரூந்தின் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளும் பேரூந்துடன் மோதி பெரும் சேதத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் பேருந்து மற்றும் லொறிகளின் சாரதிகள் உட்பட 25 பேர் காயங்களுக்குள்ளாகி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களி;ல் 12 பேர் பெண்களாவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமயக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
25 May 2025